தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் நேரம். மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் இந்த வாரம் 13 படங்களை ரிலீஸ் செய்கின்றனர். மார்ச் 6ஆம் தேதி அன்று, சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், சேரன் இயக்கியுள்ள ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, ஆர்கே நடித்த என் வழி தனி வழி, மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, இரவும் பகலும், தொப்பி, சேர்ந்து போலாமா, இஞ்சி மொரப்பா, ஆயா வடை சுட்ட கதை என 11 நேரடித்தமிழ்ப்படங்கள் வெளிவர உள்ளன. மேற்கண்ட படங்களுடன் 2 டப்பிங் படங்களும் சேர்ந்து, 13 படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. இன்னொரு பக்கம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடைபெற்று வருகிறது.
இந்த நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்வது என்பது தற்கொலைக்கு சமம் என்று தெரிந்தும், சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன் படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொல்வதோடு, தவறான நேரத்தில் அப்படம் ரிலீஸ் ஆவதால் நிச்சயமாக வெற்றியடைய வாய்ப்பில்லை என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்கள். சித்தார்த் கடைசியாக நடித்த காவியத்தலைவன் உட்பட பல படங்கள் தோல்வியடைந்ததினால் எனக்குள் ஒருவன் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. தியேட்டர்காரர்களும் எனக்குள் ஒருவன் படத்தை திரையிட ஆர்வம் காட்டவில்லையாம். அதன் காரணமாக ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்கள் பரணில் கிடந்தத எனக்குள் ஒருவன். இனியும் போட்டு வைத்தால் வேலைக்கு ஆகாது என்பதால் தூசுதட்டி இந்த வாரம் தியேட்டருக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தவறான நேரத்தில் வெளியாவதால் எனக்குள் ஒருவன் படத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தான் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் எனக்குள் ஒருவன் படத்தைத்தான் சித்தார்த் மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார்...!