ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
21.02.2015 அன்று லிங்கா படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், பெங்களுர் சிட்டி சிவில் அண்ட் செஷன் கோர்ட்டில் லிங்கா பட விநியோகஸ்தர்களின் போராட்டத்துக்கு எதிராகவும், அது குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு பெற்றிருந்தார். லிங்கா பட விவகாரம் குறித்தோ, அதன் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் குறித்தோ, ரஜினிகாந்த் குறித்தோ கருத்து தெரிவிக்கக் கூடாது என லிங்கா விநியோகஸ்தர்களுக்கும், செய்திகளை வெளியிடக் கூடாது ஊடகங்களுக்கும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது.
இதனால் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியாத அளவுக்கு லிங்கா பட விநியோகஸ்தர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே, நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து வதாடுவதற்காக, பெங்களூருவின் முன்னணி வழக்கறிஞரான ஆச்சார்யாவை தங்கள் சார்பாக வாதாட நியமித்தனர்.
ராக்லைன் வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கு பெங்களுர் சிட்டி சிவில் அண்ட் செஷன் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது இங்கிருந்து பெங்களுருவுக்கு சென்றுள்ளனர் லிங்கா பட விநியோகஸ்தர்கள். கோர்ட்டுக்கு சென்ற அவர்களை 20க்கும் மேற்பட்ட ரௌடிகள் சூழ்ந்துகொண்டு மிரட்டினார்களாம். கோர்ட் வளாகத்தில் நாங்கள் இருப்பதை அறிந்து ராக்லைன் வெங்கடேஷ்தான் ஆட்களை அனுப்பி எங்களை மிரட்ட வைத்திருக்கிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர் விநியோகஸ்தர்கள். தன் கட்சிக்காரர்களை ரௌடிகள் மிரட்டுவதை கேள்விப்பட்ட ஆச்சார்யா வெளியே வந்து போலீஸில் புகார் கொடுக்க, அதன் பிறகே ரௌடிகள் அங்கிருந்து கலைந்து சென்றார்களாம்.