'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இளையராஜா தான் இசையமைத்த 1000 படங்களின் இசைக்கான ராயல்டியை அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கே கொடுத்துள்ளார். ஏ.ஜி. மியூசிக், எக்கோ உள்ளிட்ட மியூசிக் நிறுவனங்கள் மீது இளையராஜா தொடர்ந்த வழக்கில், இளையராஜாவின் இசையை பயன்படுத்த சம்பந்தப்பட்ட ரிக்கார்டிங் நிறுவனங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை இளையராஜா சந்தித்தார். அவருடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவும் உடன் இருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, இதுவரை எனது பாடல்கள் அனைத்தும் உலகளவில் பல வழிகளில் பலராலும் வினியோகிக்கப்பட்டது. இனிமேல் என்னுடைய இசையை அதிகாரப்பூர்வமாக உலகளவில் எந்த ஒரு மொபைல் நிறுவனமும், உலகளவிலான இணையதளங்களும், யு-டியூப் உள்ளிட்ட இன்னும் பல வீடியோ ஸ்ட்ரீம் தளங்களிலும், ஆடியோ, வீடியோ விளம்பரங்களிலும், இசை கருவிகளில் என் பாடல்களை என்னுடைய அனுமதி இன்றி ஒலி-ஔிபரப்ப கூடாது. மேலும் எனது பாடல்களையும் ரீ-மிக்ஸ் செய்யவோ, எப்.எம். மற்றும் டிவிக்களிலோ, மேடை நிகழ்ச்சிகளில், பொது இடங்களில் எனது இசையை உபயோகிக்க, என்னுடைய உரிய அனுமதி பெற வேண்டும்.
நான் இதுவரை இசையமைத்த 1000 படங்களின் இசைக்கான ராயல்டியை தயாரிப்பாளர் சங்கத்திடம் வழங்கியுள்ளேன். அவர்கள் அதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும். இதில் நானும் ஒரு அங்கம். இனி என்னிடமும், தயாரிப்பாளர்கள் சங்கத்திடமும் உரிய அனுமதி பெற்று எனது பாடல்களை பயன்படுத்த வேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.