இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஒரு படம் ஹிட் ஆனதும், அந்தப் படத்தின் ஹிட்டை வைத்து அடுத்த பட வாய்ப்பை அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பெற்று விடுவார்கள். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் மில்டன். அந்தப் படம் சரியாகப் போகாததால் அதன் பின் இயக்குனர் ஆசையை மூட்டை கட்டி விட்டு, தொடர்ந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கோலி சோடா' படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக மாறினார். மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து பல கோடிகளை அந்தப் படம் வசூலித்தது.
அந்தப் படத்தின் வெற்றியால் விஜய் மில்டன், விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். '10 எண்றதுக்குள்ளே' என்ற தலைப்பில் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்திற்காக சார்மி நடிக்க ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு பாடலுக்கு மட்டுமே சுமார் 3 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். தனது முதல் படத்தை அரை கோடிக்குள் எடுத்து முடித்த விஜய் மில்டன் பெரிய ஹீரோ என்றவுடன் கோடிகளில் பட்ஜெட்டைப் போட்டுவிட்டாரா என்கிறார்கள். பெரிய ஹீரோ என்றால் படத்தின் பட்ஜெட் பெரிதாகத்தானே போகும். 'ஐ' மாதிரி படம் ஒன்றில் விக்ரம் நடித்து விட்டு அடுத்து வரும் படத்தில் ஓரளவுக்குக் கூட செலவு செய்யாமல் பாடல் எடுக்க முடியுமா என்றும் படம் சம்பந்தப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.
அதானே....'10 எண்றதுக்குள்ளே'ன்னு பேரு வச்சிட்டு எண்ணி எண்ணியா செலவு பண்ண முடியும். டைட்டில் படத்துக்கு மட்டும்தான், செலவழிக்கிறதுக்கு இல்லை.