டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பன்றிக்காய்ச்சல் என்ற கொடிய நோய் நாடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியும் உள்ளார்கள். சமீபத்தில்கூட தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்த இந்தி நடிகை சோனம் கபூர், சல்மான்கானுடன் ஒரு இந்தி படப்பிடிப்புக்காக குஜராத் சென்றிருந்தபோது அவரை பன்றி காய்ச்சல் தாக்கியது. அதைத் தொடர்ந்து உடனடியாக குஜராத் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிசிசை அளிக்கப்பட்டு தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நடிகர் நடிகைகள் மத்தியில் பன்றிக்காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழில் அப்பாடக்கர் படத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி-த்ரிஷா இருவரும் காட்சிகளில் நடித்து முடித்ததும் தங்களது முகத்திற்கு கவசம் அணிந்து கொளகிறார்கள். அதோடு, மற்றவர்களையும் முக கவசம் அணிந்து பன்றி காய்ச்சல் வராமல் தப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் உஷார்படுத்தி வருகிறார்கள்.