சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக இருக்கும் காமெடியன் நம் படத்தில் இருந்தால் நல்லது என்று நினைக்காத இயக்குநர்கள், நடிகர்களே கிடையாது. கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என யார் நம்பர் ஒன்னாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கேரக்டரை உருவாக்கி அவரை நடிக்க வைத்து விடுவார்கள். தற்போது சூரி முன்னணி காமெடி காமெடியனாக இருப்பதால் இளம் ஹீரோக்கள் பலரும் அவரை சிபாரிசு செய்கின்றனர். இப்படி வருந்தி அழைத்து சூரியை தன்னுடன் நடிக்க வைக்கும் ஹீரோக்கள் படத்தின் பப்ளிசிட்டியில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள்.
விக்ரம் பிரபு உடன் சூரி இணைந்து நடித்த வெள்ளக்கார துரை படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அப்போது விக்ரம் பிரபு - சூரி இணைந்து நடிக்கும் என்ற வாசகத்துடன் விளம்பர டிசைன் உருவாக்கப்பட்டது. நாளிதழ்களிலும் அப்படி ஒரு விளம்பரம் வெளியானது. அதைப் பார்த்த விக்ரம் பிரபு தரப்பினர் கடுப்பானார்கள். விக்ரம் பிரபு - சூரி இணைந்து நடிக்கும் என்ற வாசகத்தை உடனடியாய் விளம்பரங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி அந்த வாசகம் நீக்கப்பட்டது. விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளக்கார துரை என்று வாசகம் சேர்க்கப்பட்டது. அதுபோல் இப்போது ஒரு சம்பவம். சுராஜ் இயக்கத்தில் அப்பாடக்கர் படத்தில் ஜெயம் ரவியும், சூரியும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஸ்டில்ஸ் சில தினங்களுக்கு முன் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஜெயம் ரவிக்கு இணையாக சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ஜெயம்ரவியின் தந்தை எடிட்டர் மோகன் கடுப்பாகிவிட்டாராம். இது பற்றி தயாரிப்பாளரிடம் கோபத்தைக் காட்ட, உடனடியாய் பி.ஆர்.ஓ.மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் மெயில் அனுப்பி அந்த ஸ்டில்ஸை பிரசுரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.