ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வரும் சில நடிகைகள் தங்களது பெயருக்குப் பின்னால் தங்களது ஜாதியையும் இணைத்துள்ளனர். அதாவது, நாயர், மேனன் என்று இணைத்துக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பூ படத்தில் நடித்த பார்வதியின் பெயரோடு அப்போது அவரது ஜாதி ஒட்டிக்கொள்ளவில்லை.ஆனால், தனுசுடன் மரியான் படத்தில் அவர் நடித்தபோது, அப்படத்தின் ஆடியோ விழாவில, அவரை பார்வதி நாயர் என்று மேடையில் குறிப்பிட்டனர். ஆனால் அப்போது, நான் பார்வதி நாயர் அல்ல பார்வதிதான் என்று சத்தமாக குரல் கொடுத்தார் பார்வதி. ஆனபோதும், அதன்பிறகு அவர் பெயரோடு நாயரும் இணைந்து விட்டது. இந்த நிலையில்,உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ள அவரை அப்படத்தின் ஆடியோ விழாவில் மேடைக்கு அழைத்த பார்த்திபனும், பார்வதி நாயர் என்றுதான் சொன்னார். ஆனால், அப்போதும் நாயர் வேண்டாம். பார்வதி என்றே சொல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்ட பார்வதி, அதைத் தொடர்நது மீடியா நண்பர்களிடமும் பார்வதி என்று மட்டுமே என்னை குறிப்பிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு வருகிறார் அவர்.