தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முற்றிலும் புது முகங்கள் இணைந்து உருவாக்குகிற படம், ''அடங்கா பசங்க''. கவுதம், பாவேந்தன், சுரேஷ் பாபு, சந்தோஷ், சுதீப், வர்ஷா, சிந்து, நிகினா, லட்சுமி, கனகப்பிரிய என நடிப்பவர்களும் புதுசு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி, தயாரித்து இயக்கும் செல்வநாதனும் புதுசு, ஒளிப்பதிவு செய்யும் அல்கேஷ், இசை அமைக்கும் ஆல்ரின் இப்படி புதுமுங்களாக இணைந்து உருவாக்கினாலும் படத்தில் துளியும் கிளாமரோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை என்கிறார் இயக்குனர் செல்வநாதன்.
மேலும் அவர் கூறியதாவது: சினிமாவை உயிராக நேசிக்கும் இளைஞர்கள் இணைந்து உருவாக்குகிற படம் இது. ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். படிக்க வைத்தால் வேலை கிடைத்து விடும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வைக்கிறார்கள். ஆனால் வேலை கிடைப்பதில்லை. அவர்களின் வெற்றிடத்தை காதல் அடைத்துக் கொள்கிறது. அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. சினிமா கனவுடன் திரிந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார் பேட்டை, நாட்றாம்பள்ளி, போன்ற சினிமாவின் பார்வை அதிகம் படாத இடங்களில் படமாக்கி இருக்கிறேன். புதியவர்களின் இந்தப் படம் புதிதாக இருக்கும் என்கிறார்.