தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி முறைப்படி பரதநாட்டியம் கற்றவர், தன் தந்தையின் வழியில் நாடகங்கள் நடத்தி வருகிறார். தாத்தா ஒய்.ஜி.பார்த்தசாரதி தொடங்கிய யுனைடட் அமெச்சூர் நாடக கம்பனி பாணியில் இவர் மகம் நாடக குழுவை நடத்தி வருகிறார். இவரது முதல் நாடகமான சிவம்போ பெரும் வெற்றி பெற்றது. இதுவரை 60 மேடைகளில் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 12 நகரங்களில் மேடையேறியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது பெருமாளே என்ற நாடகத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நாடகம் வருகிற 12ந் தேதி சென்னை வாணி மஹாலில் அரங்கேற இருக்கிறது. தான் நடத்தி வரும் காலிபர் இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் நடிப்பு ஆர்வம் மிக்கவர்களை தேர்ந்தெடுத்து தனது மகம் நாடக குழுவில் வாய்ப்பளிக்கிறார்.
மதுவந்திக்கு சினிமாவில் நடிக்கவும், படம் இயக்கவும் நிறைய வாய்ப்புகள் வந்தது. அவற்றை மதுவந்தி மறுத்து விட்டார். தன் கவனம் எல்லாம் நாடத்தின் பக்கமே. தாத்தா நடத்திய யுனைடெட் அமெச்சூர் நாடக கம்பெனி பல நடிகர்களை சினிமாவுக்கு தந்தது. அதுபோல மகம் நாடக குழு மூலம் சினிமாவுக்கு நல்ல கலைஞர்களை உருவாக்கி தருவதே எனது நோக்கம். என்கிறார். மதுவந்தி தனது சித்தப்பா ரஜினியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.