ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் வினய், மதுரிமா நடித்துள்ள படம் ''சேர்ந்து போலாமா''. வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. மலையாள இயக்குனர் அனில்குமார் இயக்கி உள்ளார். நியூசிலாந்தில் வாழும் மலையாளியான சசி நம்பீசன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுதும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளரும், வினய்யும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
தயாரிப்பாளர் சசி நம்பீசன் கூறியதாவது: நியூசிலாந்தில் நடக்கும் ஒரு டிராவல் திரில்லர் கதை. எனது நண்பரும் மலையாளத்தில் 40 படங்களுக்கு மேல் இயக்கியவருமான அனில் குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக வினய்க்கு 17 லட்சம் சம்பளம் பேசப்பட்டு அதில் 50 சதவிகிதம் கொடுக்கப்பட்டது. மீதி கடைசி நாள் படப்பிடிப்பின் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் வினய் திடீரென்று படப்பிடிப்பு நடக்கும்போதே அனைத்து பணமும் உடனே வேண்டும் இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று தகராறு செய்தார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. 15 பேர் இந்தியாவிலிருந்து வந்து தங்கி இருந்தனர். நியூசிலாந்தில் செலவு அதிகம். அதனால் எனக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. தங்குவதற்கு 5 நட்சத்திர ஒட்டல், ஊர்சுற்றுவதற்கு பிஎம்டபிள்யூ கார், இந்திய உணவு வகை என அவருக்கு அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. படத்திற்கு டப்பிங் பேச வரவில்லை. புரமோசன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. வினய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து வினய் கூறியதாவது: தயாரிப்பாளர் சொல்வது அனைத்தும் பொய். நானாக ஒரு நாள்கூட படப்பிடிப்பை நிறுத்தவில்லை. அவர்கள்தான் அனுமதி கிடைக்கவில்லை என்று நிறுத்தினார்கள். ஒப்பந்தப்படி சம்பளம் தரவில்லை. தங்குவதற்கும், போக்குவரத்திற்கும், உணவிற்கும் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. என்றாலும் பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தேன். இன்னொருவரை வைத்து டப்பிங் பேசி என்னை அவமானப்படுத்தினார். சம்பள பாக்கி 10 லட்சம் தரவேண்டும். நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். நடிகர் சங்கம் 6 லட்சத்தை விட்டுக்கொடுக்கச் சொன்னது. அதையும் செய்தேன். மீதமுள்ள 4 லட்சத்தையும் இன்னும் தரவில்லை. கேட்டால் ஆள் வைத்து மிரட்டுகிறார். என்றார் வினய்.
படம் நாளை மறுநாள்(மார்ச் 6ம் தேதி) ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.