'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஆடியோ நிறுவனங்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், ஆடியோ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலை தடையை நிரந்தர தடையாக மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில், என் இசை அமைப்பு, ஒலிப்பதிவு, பாடல்களுக்கு, முழு பதிப்புரிமையும் எனக்கு தான் உள்ளது. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல், பக்தி பாடல்களையும், ஒலிப்பதிவு செய்துள்ளேன். ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட உரிமை, காலாவதியாகி விட்டது. அவற்றை புதுப்பிக்காமல், உரிமை கொண்டாட முடியாது. எனவே, என் பாடல்கள், ஒலிப்பதிவில், எனக்கு உள்ள உரிமையில் குறுக்கிட, அகி மியூசிக், எக்கோ மியூசிக் உள்ளிட்ட ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மியூசிக் நிறுவனங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதித்து நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.