இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்.. ஏற்கனவே 'மை பாஸ்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோதே அடுத்தடுத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள்.. அதன்பின் 'த்ரிஷ்யம்' ஹிட் மூலமாக உலக நாயகன் கமலை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும் கூட, ஏற்கனவே கொடுத்த வாக்குப்படி திலீப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப்படத்தில் ஜோஸுட்டி என்கிற மனிதனின் முப்பது வருட வாழ்க்கையைத்தான் கதையாக மாற்றியிருக்கிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, அங்கேயே திருமணமும் செய்துகொண்டு, பின்னாளில் நியூசிலாந்துக்கு பயணமாகும் அளவுக்கு டெவலப் ஆகிறார் திலீப். ஆனால் அங்கே வெவ்வேறு சூழலில் இன்னும் இரண்டு பெண்கள் அவரது வாழ்கையில் குறுக்கிடுகிறார்கள். அது அவரது வாழ்க்கை பயணத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஜோதி கிருஷ்ணா மற்றும் ரக்சனா நாராயணமூர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை..