‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அபிநயா, அனன்யா என்றதுமே இது 'நாடோடிகள்' படத்தை பற்றிய, ஏதோ ஒரு பழைய விடுபட்டுப்போன செய்தியை சொல்லப்போகிறார்களோ என நினைத்தால், அதை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். இது வேற செய்தி.. இந்த 'நாடோடி' கதாநாயகிகள் இருவரும் இணைந்து தற்போது 'தி ரிப்போர்ட்டர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள்.. அனன்யா இதில் ரிப்போர்ட்டராக டைட்டில் ரோலில் நடித்தாலும் அவரது கேரக்டருக்கு கதாநாயகி அந்தஸ்து இல்லையாம். அபிநயா தான் கதாநாயகியாம். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கைலாஷ்.. முக்கியமான விஷயம் இயக்குனர் சமுத்திரக்கனி இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஏன் உங்களுக்குரிய முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்து நடிக்கிறீர்கள் என அனன்யாவிடம் கேட்டால், “ஐயா சாமி.. ஆளைவிடுங்கள்.. இந்த மெயின் ரோல், கேரக்டர் ரோல் என்கிற போட்டியில் எல்லாம் நான் இல்லை.. என்னை அதில் சேர்க்கவும் சேர்க்காதீர்கள்.. எனக்கு இதுதான் சரியாக இருக்கும் என இயக்குனர் முடிவு செய்து எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதில் நடிப்பதுதான் என் வேலை” என ஒரே போடாக போடுகிறார். அதற்கேற்ற மாதிரி முழுக்க முழுக்க துபாயில் தயாராகி இருக்கும் 'கல்யாணிசம்' என்கிற படத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அனன்யா.. ஆக, அவரை பொறுத்தவரை சரியான ரூட்டில் தான் போய்க்கொண்டு இருக்கிறார் அனன்யா.