பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
அபிநயா, அனன்யா என்றதுமே இது 'நாடோடிகள்' படத்தை பற்றிய, ஏதோ ஒரு பழைய விடுபட்டுப்போன செய்தியை சொல்லப்போகிறார்களோ என நினைத்தால், அதை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். இது வேற செய்தி.. இந்த 'நாடோடி' கதாநாயகிகள் இருவரும் இணைந்து தற்போது 'தி ரிப்போர்ட்டர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள்.. அனன்யா இதில் ரிப்போர்ட்டராக டைட்டில் ரோலில் நடித்தாலும் அவரது கேரக்டருக்கு கதாநாயகி அந்தஸ்து இல்லையாம். அபிநயா தான் கதாநாயகியாம். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கைலாஷ்.. முக்கியமான விஷயம் இயக்குனர் சமுத்திரக்கனி இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஏன் உங்களுக்குரிய முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்து நடிக்கிறீர்கள் என அனன்யாவிடம் கேட்டால், “ஐயா சாமி.. ஆளைவிடுங்கள்.. இந்த மெயின் ரோல், கேரக்டர் ரோல் என்கிற போட்டியில் எல்லாம் நான் இல்லை.. என்னை அதில் சேர்க்கவும் சேர்க்காதீர்கள்.. எனக்கு இதுதான் சரியாக இருக்கும் என இயக்குனர் முடிவு செய்து எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதில் நடிப்பதுதான் என் வேலை” என ஒரே போடாக போடுகிறார். அதற்கேற்ற மாதிரி முழுக்க முழுக்க துபாயில் தயாராகி இருக்கும் 'கல்யாணிசம்' என்கிற படத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அனன்யா.. ஆக, அவரை பொறுத்தவரை சரியான ரூட்டில் தான் போய்க்கொண்டு இருக்கிறார் அனன்யா.