இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்மொழி திறமைகளை கொண்டவர் பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். நடிகர் என்றால் அதில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என வெரைட்டி காட்டுபவர். தமிழில் 'லேசா லேசா' என்கிற ஒரே படத்தில் மட்டும் ஷாம் வீட்டு வேலையாளாக லேசாக தலைகாட்டியதோடு சரி.. நடிப்பு போக இவருக்கு பிடித்தமானது விவசாயம் தான். அதிலும் ரசாயன உரங்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட இவர் இயற்கை விவசாய ஆர்வலர்.
அதனால் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தற்போது தனியாக ஒரு பண்ணையை உருவாக்கி அங்குள்ள நிலத்தில் இயற்கை சார்ந்து விவசாயம் செய்கிறார். நெல்லை விளைவிப்பதில் உள்ள அரசியலை கூட புட்டுபுட்டு வைக்கிறார் சீனிவாசன். ஆரம்பத்தில் இவருக்கு உதவியாக இருந்தது இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள் தானாம். அதன் பின் விவசாய அதிகாரிகளும் பொதுமக்களும் கூட இவரது முயற்சிக்கு ஒத்துழைப்பு தர ஆரம்பித்துவிட்டார்களாம்.