ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கில் விரைவில் அதிகம் பேசப்படக் கூடிய நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா மீண்டும் இடம் பிடிப்பார். அடுத்தடுத்து 'ருத்ரமாதேவி, பாகுபலி' ஆகிய இரண்டு சரித்திரப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போதுள்ள நடிகைகளில் நல்ல உயரத்துடனும், அற்புதமான உடலமைப்புடனும் சரித்திரப் படங்களில் நடிக்க மிகவும் பொருத்தமான நாயகியாக இருப்பவர் இவர் மட்டுமே. ஏற்கெனவே 'அருந்ததி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
தற்போது 'ருத்ரமாதேவி' படத்திற்காக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது அனுஷ்கா படம் பற்றி பேசியதாவது,
“அருந்ததி' படம் பண்ணதுக்குப் பிறகு நிறைய சரித்திரக் கதைகள் என்னைத் தேடி வந்த்து. அதெல்லாம் ரொம்ப இன்டிரஸ்டிங்கா இல்லை. இந்தக் கதையை எனக்கு இயக்குனர் குணசேகர் சார் சொன்னதும் ரொம்ப பிடிச்சிது. ஆந்திரா, தெலுங்கானா பள்ளிகளில் 'ருத்ரமாதேவி' கதைய வரலாற்றுப் பாடமாக சொல்லிக் கொடுப்பாங்க. குழந்தைகளுக்கும் அப்படி ஒரு பாடத்துல படிச்ச கதையை சினிமாவாக பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
குணசேகர் சார் இயக்கத்துல நடிக்கிறது எனக்கு பெருமை. இந்தப் படத்தை நேரடியாக 3டில படமாக்கறோம். இந்தப் படத்துல இருக்கிற டீம் எல்லாருமே பெரிய டீம். அனுபவம் வாய்ந்தவங்க, எல்லாரையும் குணசேகர் சார் ஒண்ணு சேர்த்திருக்காரு. ஒரு வரலாற்றை ரீ-கிரியேட் பண்றது சாதாரண விஷயமில்லை. அதை இயக்குனர் அருமையாக பண்ணியிருக்காரு. விஷுவலா இந்தப் படம் ஒரு மிரட்டலா இருக்கும்.
இந்தப் படத்துக்காக உண்மையான தங்க நகைகளை அணிந்து நடிச்சிருக்கேன், நடிக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும். இந்தப் படத்தை அதுக்காகவே பெண்கள் ரசிச்சிப் பார்க்கலாம். இந்த மாதிரி ஒரு படத்தை இயக்கணும்னு இயக்குனர் குணசேகர் பத்து வருடமா நினைச்சிக்கிட்டு இருந்தாரு. இப்பதான் அவரால அதை பண்ண முடிஞ்சுது. இந்த மாதிரி ஒரு படத்துல ஒரு கதாபாத்திரத்துல நான் நடிச்சது எனக்குப் பெருமைதான்.
இந்த மாதிரி ஒரு படத்தை நீங்க தியேட்டர்ல பார்த்தால்தான் அதனோட உண்மையான ரசனையை புரிஞ்சிக்க முடியும்,” என்கிறார் அனுஷ்கா.