டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்பெல்லாம் சினிமாவில் நல்ல தரமான பாடல்களை எழுதுபவர்களுக்குத்தான் அதிக வேல்யூ இருக்கும். ஆனால் இப்போது அது அடியோடு மாறி விட்டது. புரியாத வார்த்தைகளை தேடிப்பிடித்து எழுதுபவர்கள். சென்னைத்தமிழில் கானா பாட்டு எழுதுபவர்களுக்குத்தான் மவுசு கூடியிருக்கிறது. அதனால்தான் கானா பாலா பெரும்பாலான படங்களில் பாட்டு எழுதி பாடுவதோடு, பாடல்களில் நடனமாடியும் வருகிறார்.
இந்த நிலையில், தனுஷின் அனேகன் படத்தில் டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீநாறி -என்ற கூவம் வாசனை கமகமக்கும் பாடலை எழுதிய ரோகேஷ்க்கு இப்போது கோலிவுட்டில் செம கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய கானா பாடல்களையெல்லாம் இந்த பாடல் முறியடித்து ரசிகர்களை பெரிய அளவில் ஆட்டுவித்துக்கொண்டிருப்பதாலேயே இப்போது மற்ற இசையமைப்பாளர்களும் ரோகேஷை தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். அதில் முந்திக்கொண்டவர் டி.இமான். ஜெயம்ரவி நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திற்காக டண்டனக்கா என்றொரு பாடலை ரோகேஷை வைத்து எழுத வைத்துள்ள இமான், அந்த பாடலை அனிருத்தை பாட வைத்து பரபரப்பு கூட்டியிருக்கிறார்.ஆனால் அனிருத் மட்டும் என்ன சளைத்தவரா, அடுத்து தான் இசையமைக்கும் ஒரு படத்திற்கும் முந்தைய கானா பாடல்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் எனக்கொரு பாட்டு எழுதி தாருங்கள் என்று ரோகேஷை கேட்டுக்கொண்டுள்ளாராம்.ஆக, தமிழ் சினிமாவின் ட்ரென்ட் இப்படி போய்க்கொண்டிருக்கிறது.