தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பத்து பத்து என்ற படத்தில் ஆபாசமான வேடத்தில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகை சோனா. அதையடுத்து குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமாகி வேகமாக வளர்ந்த அவர், படம் தயாரிக்கும் அளவுக்கு சினிமாவில் முன்னேறினார். பின்னர், சில அரசியல்வாதிகளின் இருட்டு ரகசியங்களை படமாக்கப்போவதாக சொல்லி மிரட்டல் விடுத்தார். அதன்பிறகு, நள்ளிரவு பார்ட்டியில் எஸ்.பி.பி.சரண் தன்னை கற்பழிக்க முயற்சி செய்ததாக பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டார் சோனா. அதையடுத்து, சோனா டேஞ்சர் பார்ட்டி என்று அவருடன் நட்பு வைத்திருந்த இளவட்டங்கள் பெரும்பாலும் அவருடனான நட்பை முறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில், தற்போதும் சில படங்களில் நடித்துவரும் சோனா, எனக்கு கவர்ச்சியான வேடங்களை விட அடி மிதி உதை கொடுப்பது போன்ற அதிரடியான வேடங்களில் நடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும் என்கிறார். மேலும், மேடைகளுக்கு வரும்போது அரசியல் பற்றி நிறைய பேச நினைக்கிறேன். ஆனால் வாயை திறந்தால் கண்ட்ரோல் இல்லாமல் பேசி விடுவேன் என்பதால்தான் நான் வாயே திறப்பதில்லை.