ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பில விக்ரம் மிரட்டியது, இதுவரை தமிழ்சினிமாவின் கேமரா படாத படப்பிடிப்புத்தளங்கள், ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பான இசை, பி.சி.ஸ்ரீராமின் கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு என ஐ படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ்வான விமர்சனம் பெரிய வெற்றியை கொடுத்தது.
அதே நேரம், சுஜாதா இல்லாததினால் ஷங்கரால் விறுவிறுப்பான திரைக்கதை பண்ண முடியவில்லை எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன. என்னதான் எதிர்மறை விமர்சனம் இருந்தாலும் விக்ரம் நடிப்பை ஒரு தடவை தியேட்டரில் பார்த்துவிடுவது என சாமான்ய மக்கள் எண்ணியதன் காரணமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். ஷங்கரின் பிரம்மாண்டத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று மக்கள் எடுத்த முடிவும் ஐ படத்துக்கு பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்துவிட்டது.
உலகளவில் முதல்நாளில் மட்டும் ஐ படம் ரூபாய் 25 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்பட்டது. தற்போது 50 நாட்களைக் கடந்துள்ளநிலையில் ஐ திரைப்படம் இதுவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்கிறார்கள். ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனோ 300 கோடி ரூபாய்வசூலித்திருப்பதாக அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவரா இருக்கே...!