சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு தரக்கோரி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மெகா பிச்சை போராட்டத்துக்குப்பிறகு பிரச்சினை இன்னும் சூடு பிடித்தது. அதோடு, முதலில் சிறிய தொகையை நஷ்ட ஈடாக தருவதாக சொன்ன ரஜினிதரப்பு பின்னர் அதிக தொகை தர முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. நடிகர் சங்கத்தலைவரான சரதகுமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூக தீர்வுக்கான பேச்சுவார்தையிலும் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில், லிங்கா படம் பற்றியோ, ரஜினி பற்றியோ யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கர்நாடக நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, முக்கியமான ஊடகங்களும் லிங்கா பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் தடை வாங்கியிருக்கிறார்கள். இதனால், அடுத்து லிங்கா படம் சம்பந்தமாக சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் எதுவும் பேச முடியாமல் பின்வாங்கிவிட்டனர். இதையடுத்து, இந்த விசயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல லிங்கா படத்தினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் முடிவெடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.