பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஐ படத்தை தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் எடுக்கவிருக்கிறார். ரஜினி ஹீரோவாக நடிக்க உள்ள இந்தப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது. எந்திரன் - 2 படத்தில் ஹீரோவுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ரஜினி விரும்பினாராம். அதன் காரணமாக, அண்மையில் மும்பை சென்ற ரஜினியும், ஷங்கரும், இந்த படம் சம்பந்தமாக அமீர்கானுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்!
எந்திரன்-2 கதையைக் கேட்ட அமீர்கான், படத்தில் நடிக்க அப்போதே ஓகே சொன்னார் என்றும் கூறப்பட்டது. அடிப்படை இல்லாத செய்தி என்று அடித்துச் சொல்லுமளவுக்குத்தான் இருக்கிறது இந்த தகவல்! ஆனால், ரஜினி மற்றும் ஷங்கர் தரப்புக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் இந்த தகவல் அனைத்தும் உண்மை என உறுதி செய்தனர்.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக ஒரு தகவல்! அதன்படி எந்திரன் -2 படத்தில் அமீர்கான் நடிக்கவில்லையாம்! எந்திரன் -2விலிருந்து விலகினார்? ஷங்கர் எந்திரன் படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடக்கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அப்படியிருக்க, பிரம்மாண்டமான முறையில் எடுக்கவிருக்கும் எந்திரன்-2வை எடுத்து முடிக்கவும் அதே கால அளவு எடுக்கப்படும். எனவே, அமீர்கான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள் பாதிக்கப்படும் என்றும், இது தவிர அமீர்கான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள மற்ற புராஜெக்ட்டுகளும் பாதிக்கப்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்தாராம்!