என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
பாடலாசிரியர் தாமரை, தன் கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி, பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.. நேற்று முதல் தனது போராட்டத்தை தியாகுவின் வேளச்சேரி வீட்டு முன்பு தொடர்கிறார்.
தியாகுவோ தனக்கு தாமரையுடன் வாழ துளியும் விருப்பமில்லை, சட்டப்படி பிரிய தயாராக இருக்கிறேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சில மாணவர் அமைப்புகள் இன்று மாலை தன்னை சந்தித்து ஆதரவு தர இருப்பதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தாமரை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாமரை தனது போராட்டத்தில் தன் மகனையும் உடன் ஈடுபடுத்தியுள்ளார். தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் அவரையும் தனது போராட்டத்தில் ஈடுபட வைப்பதால் அவரது கல்வி பாதிக்கப்படுவதோடு, நாளை அவர் பள்ளிக்கு செல்லும் உடன் படிக்கும் மாணவர்கள் இதைப்பற்றி கேட்டால் அவரது மனநிலை எப்படி இருக்கும்... உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொண்டு, தாமரை இந்த போராட்டத்திலிருந்து தன் மகனை விலக்கி கொள்ள வேண்டும் என்று சமூக நல விரும்பிகள் சிலர் அறிவுறுத்துகின்றனர்.