டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாடலாசிரியை தாமரை, தன்னை விட்டு சென்ற தன் கணவர் தியாகுவை சேர்த்து வைக்க கோரி தியாகுவின் அலுவலகம் முன் தன் மகனுடன் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். சூளைமேட்டில் உள்ள தியாகுவின் அலுவலகம் முன் இரண்டு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்.
தியாகு நான் எங்கும் ஓடிப்போகவில்லை. வேளச்சேரியில் உள்ள எனது மகள் வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறினார். இதனால் நேற்று (மார்ச் 1) மூன்றாவது நாளாக வேளச்சேரியில் தியாகு தங்கி உள்ள அவரது மகள் சுதாகாந்தியின் வீட்டு முன் தர்ணா போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையில் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் சில தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் தாமரையுடன் இனி சேர்ந்து வாழவே முடியாது பல சோதனைகளுக்கு பிறகு நான் எடுத்த முடிவு இது. சட்ட ரீதியாக பிரிவதா? சமூக ரீதியாக பிரிவதா என்பதை தாமரைதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் தியாகு.