பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பல தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் துணை, இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜேஷ் கே.வாசு. இவர் தமிழில் முதல் முதலாக இயக்கும் படத்திற்கு அச்சமின்றி எனப் பெயர் சூட்டியிருக்கிறார். ஷாஸ் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை எம்.ஐ.பாதுஷா தயாரிக்கிறார்.கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், கதையின் நாயகனாக புதுமுகம் வினாயக் நடிக்கிறார். இவரது ஜோடியாக தமிழ் படம் நாயகி நிஷா பான்டே நடிக்கிறார். மற்றொரு நாயகியாக பெங்களூரு அழகி ஒருவர் நடிக்க, இந்த மூவருடன் சம்பத், டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன்,முத்துக்காளை, அம்பிகா, நளினி உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கின்றனர்.
படத்தை பற்றி அறிமுக இயக்குநர் ராஜேஷ் கே.வாசு கூறுகையில், அதிகம் படித்து அதிகாரிகளாக வலம் வரும் சிலர், நாகரீகம் என்கிற பெயரில் நம் கலாச்சாரத்தை மறந்து, கடமை தவறுவதால் அவர்கள் பாதிப்படைவதோடு, அவர்களின் நல்ல குடும்பத்தின் எதிர்காலமும் வழி தவறிப் போகிறது. இப்படி வாழ்க்கையில் நடக்கும் அழுத்தளும்ம ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதில் சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கி பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாத ஒரு படத்தை உருவாக்குகிறேன். இந்தப் படத்தின் கதையை மக்களிடம் இருந்து எடுத்திருப்பதால் மக்கள் வரவேற்று, ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார். நாமும் நம்புவோம்!!