ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகாபிரபு, பகவதி, குத்து, ஏய், சண்டமாருதம் உள்பட பல ஆக்சன் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். அதோடு அங்காடித்தெரு படத்தில் கொடூரமான வில்லனாகவும் நடித்தார். ஆனால், தற்போது தனது ஆக்சன் ரூட்டில் இருந்து மாறி ரொம்ப நல்லவன்டா நீ என்ற படத்தை காமெடி கதையில் இயக்கியிருக்கிறார். அப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகன் மிர்ச்சி செந்தில், நாயகி ஸ்ருதி பாலா, சோனா, ரோபோ சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது டைரக்டர் ஏ.வெங்கடேஷ் பேசுகையில், கில்லாடி, சண்டமாருதம் படங்களுக்கு பிறகு எனது இயக்கத்தில், ரொம்ப நல்லவன்டா நீ படம் மார்ச் 26ந்-தேதி ரிலீஸ் ஆகுது. இந்த படத்துக்கான கதையை ரொம்ப வித்தியாசமான யோசித்து பண்ணியிருக்கேன். முதல்ல கதையை கேட்ட தயாரிப்பாளர் விழுந்து விழுந்து சிரிச்சார். ஆக சிரிப்புக்கு அங்கே கியாரண்டி கிடைச்சிடுச்சு. அதுக்கு அப்புறம் பெரிய ஹீரோ, பெரிய காமெடியனை வச்சி பண்ணலாமுன்னு நெனச்சேன். ஆனா அவங்களை சந்திக்க முடியாத சூழல் இருந்தது. அதனால்தான் மிர்ச்சி செந்தில ஹீரோவா நடிக்க வைக்க முடிவு செய்தேன். படத்துல இமான் அண்ணாச்சியும், ரோபோ சங்கரும் காமெடி செய்திருக்காங்க. எல்லா நடிகர் நடிகைங்களுமே கேட்ட நேரத்துல கால்சீட் தந்ததால 35 நாள்ல படத்தை முடிச்சிட்டேன். சண்டமாருதம் படத்துக்கு முன்னாடியே இந்த படம் முடிஞ்சிடுச்சு. ஆனா பிஸினசுக்கு லேட்டாயிடுச்சு.
இந்த படத்தின் கதை 7 நாளில் நடக்கிற விசயம். அறிமுகம் இல்லாத ரெண்டு பேர் சந்திக்கிறாங்க. அப்புறம் ஏன்டா சந்திச்சோம்னு பீல் பண்றாங்க. அதாவது உங்களோட பிரச்சினைய இன்னொருத்தன்கிட்ட சொல்லாதீங்க. அப்படி சொன்னா அது இன்னும் பெரிய பிரச்சினையாகிடும் என்பதுதான் இந்த படத்தோட கதை.
மேலும், இந்த படத்துல கவர்ச்சி நடிகை சோனா ஒரு முக்கியான ரோல்ல நடிச்சிருக்காங்க. ஆனால் அவரை துளியும் கவர்ச்சி காட்ட வைக்கல. நடிக்க வச்சிருக்கேன். அதனால் சோனா படித்துல நடிச்சிருக்காருன்னா நிறைய சீனை கத்தரிக்க வேண்டியதிருக்கும் என்று நினைச்ச தணிக்கைக்குழு அதிகாரிங்களுக்கு படத்துல அவரை பார்த்துட்டு பெரிய ஆச்சர்யம். ஆக, சோனாவும் நடிச்சிருக்கிற என் படத்துக்கு யு சான்றிதழ் கிடைச்சிருக்கு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் என்றார் ஏ.வெங்கடேஷ்.