ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
25 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'கோட்டயம் குஞ்சச்சன்' படத்தை அந்த காலகட்ட ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். மம்முட்டி ஹீரோவாக நடித்த அந்தப்படத்தை டி.எஸ்.சுரேஷ்பாபு என்பவர் இயக்கியிருந்தார். ரஞ்சனி கதாநாயகியாகவும், இன்னொசன்ட், கே.பி.ஏ.சி லலிதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்த அந்தப்படம் காமெடி கலந்த கமர்ஷியல் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது.
அதன்பின் மம்முட்டியும் சுரேஷ் பாபுவும் 'கிழக்கன் பர்தோஸ்', 'ஸ்டாலின் சிவதாஸ்' என இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தாலும் 1999க்குப்பின் பதினைந்து வருட இடைவெளி விழுந்துவிட்டது.. 2000-ல் சுரேஷ்பாபு இயக்கிய மார்க் ஆண்டனி படத்திற்குப்பின் பத்து வருடங்களாக பீல்டிலேயே இல்லை. ஆனாலும் 2௦1௦ல் சுரேஷ்கோபி மீண்டும் அவருக்கு நடிக்க கால்ஷீட் தந்து அவரை படம் இயக்கவைத்தார்.
அந்தவகையில் இப்போது மம்முட்டியும் அவருக்கு கைகொடுக்கும் விதமாக தனது படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை தந்துள்ளதாக தெரிகிறது. இவர்தான் நம்ம ஸ்ரீகாந்த்தை முதன்முதலில் தனது 'உப்புக்கண்டம் பிரதர்ஸ் ரிட்டர்ன்ஸ்” படம் மூலம் மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர். தவிர 3௦ வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இன்னும் தனது இருப்பை தக்கவைத்திருக்கும் சுரேஷ்பாபு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். அதுமட்டுமல்ல, மம்முட்டியும் மோகன்லாலும் தங்களின் ஆரம்பகால வளர்ச்சியில் துணைநின்ற சீனியர் இயக்குனர்களை மறக்காமல் இருப்பதும் அவர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பை தருவதும் அதைவிட ஆச்சர்யம் தருகிறது.