சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
இயக்குனராக மாறுவதற்கு முன்பு வரை மோஸ்ட் வான்ட்டட் ஒளிப்பதிவாளராக இருந்தவர் தான் கே.வி.ஆனந்த். ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யனாக பட நுணுக்கங்களை கற்றுக்கொண்டிருந்தபோது, இயக்குனர் பிரியதர்ஷன் தமிழில் இயக்கிய 'கோபுர வாசலிலே' படத்தில் பணிபுரியும் வாய்ப்பும் வந்தது. அப்போது பி.சி.ஸ்ரீராமின் ஆறாவது சிஷ்யர் இவர். அந்தப்படத்தை தொடர்ந்து 1992ல் பிரியதர்ஷன் தான் இயக்கவிருக்கும் படத்திற்கு பி.சி.ஸ்ரீராமை அழைத்தார். ஆனால் அவரோ பிசியாக இருந்ததால் தனது சீடரான கே.வி.ஆனந்த்தை அனுப்பி வைத்தார்.
அந்தவகையில் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த்தின் பயணம் தொடங்கியது மலையாள சினிமாவில் தான். அந்தப்படம் தான் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த 'தேன்மாவின் கொம்பத்து'. முதல்படமே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை கே.வி.ஆனந்த்துக்கு பெற்றுத்தந்தது. அந்தப்படம் தமிழில் ரஜினி நடிக்க 'முத்து'வாக மாறியது தெரிந்த கதைதானே..
இப்படி ஒரு பிரமாதமான அறிமுகம் தந்த மலையாள திரையுலகத்தில் மீண்டும் பணிபுரியும் எண்ணமே இல்லையா என சமீபத்தில் ஒரு பேட்டியின்போது அவரிடம் கேட்கப்பட்டது.. “ஏன் இல்லாமல்.. நல்ல கதை அமைந்தால், டைரக்சனை கொஞ்ச நாள் ஒதுக்கிவைத்துவிட்டு மீண்டும் கேரளா வந்து கேமரா தூக்க தயாராகத்தான் இருக்கிறேன்” என கூறியுள்ளார். இயக்குனராக மாறியபின்னும் கூட 'சிவாஜி' படத்திற்காக மீண்டும் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் பணியாற்றியது இங்கே குறிப்பிடத்தக்கது.