டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு மெகா ஹிட்டுக்காகத்தான் நடிகர் நடிகைகள் காத்திருப்பார்கள். அதுவரை இருக்கிற இடமே தெரியாமல் இருக்கும் அவர்கள், கொடுக்கிற சம்பளத்தையும் வாஙக்கிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற ஹிட் கிடைத்ததும் அவர்களது கேரக்டரும், படக்கூலியும் எக்குத்தப்பாக எகிறி விடும்.
ஆனால் இந்த விசயத்தில் டைரக்டர் பாலாவினால் நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட ராஜேந்திரன் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாராம். வில்லனாக அவர் அதிக படங்களில் நடித்தபோதும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தொடங்கி காமெடியே அவருக்கு கைகொடுத்து வருகிறது.
அந்த வகையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருடன் போலீஸ், டார்லிங் என அவர் காமெடி கேரக்டர்களில் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், இப்போது அவரை தேடிச்செல்வதெல்லாம் காமெடி வேடங்கள்தான். அந்த வகையில், 10 படங்கள் வரை பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.
இதன்காரணமாக, அவரது சம்பளம் தற்போது தாறுமாறாக எகிறியிருக்கும் என்று சிலர் அவரை நெருங்கவே பயப்படுகிறார்கள். இந்த சேதி அவரது காதுக்கு சென்றதை அடுத்து, எனது சம்பளத்தை சில தயாரிப்பாளர்கள்தான் சற்று உயர்த்தி விட்டுள்ளனர். மற்றபடி நானாக சம்பளம் பேசினால் எனது பழைய சம்பளத்தைதான் இப்போதும் வாங்குகிறேன். அதனால் யாரும் என்னை புக் பண்ண பயப்பட வேணடிய தேவையில்லை என்று தனது சகாக்கள் மூலம் கோடம்பாக்கத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்.