தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர்களில் கவிஞர் தாமரையும் ஒருவர். மின்னலே படத்தில் இவர் எழுதிய வசீகரா என்ற பாடல்தான் முதலில் அவரை அடையாளம் காட்டியது. அதையடுத்து கெளதம்மேனன் இயக்கிய பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அவர், காதல் பாடல்களை மிகச்சிறப்பாக எழுதக்கூடியவர்.
இவர் கடந்த 2001ம் ஆண்டு தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 10 வயதில் சமரன் என்ற மகன் உள்ளான். 14 ஆண்டுகளாக சந்தோசமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் தற்போது புயல் வீசிக்கொண்டிருக்கிறது.
காரணம், கடந்த சில மாதங்களாக தோழர் தியாகுவை காணவில்லையாம். தான் செல்லும் இடத்தைப் சொல்லாமல் தலைமறைவாகி விட்டாராம். அதனால், தியாகுவை காணவில்லை என்று நேற்றைய தினம் சென்னை சூளைமேட்டில் உள்ள தியாகுவின் அலுவலகத்துக்கு சென்று மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கவிஞர் தாமரை.
அதையடுத்து, தலைமறைவாக இருந்து வருவதாக சொல்லப்படும் தாமரையின் கணவர் தியாகு, நேற்று ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தாமரை சொல்வது போல் நான் தலைமறைவாகவில்லை. எப்போதும் போலவே எனது வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மேலும், கடந்த 5 வருடங்களாகவே எனக்கும், தாமரைக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால்தான் அவரைவிட்டு பிரிந்தேன். என் மகனுடன் மட்டும் பேசிக்கொண்டிருந்தேன். அதையும் தாமரை தடுத்து விட்டார்.
எனக்கு தாமரையுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமில்லை. அதனால் அவர் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தாமரைக்கு பதில் கொடுத்துள்ளார்.