ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
திருமணம் செய்து கொண்டதும் குடும்பம் குழந்தை குட்டி என்று நடிகைகள் நடிப்புக்கு குட்பை சொல்லி வந்த காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா, அதன்பிறகுதான் பிரகாஷ்ராஜூடன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். சில படங்களில் கேரக்டர்களில் நடித்தவர் இப்போது நல்ல வேடங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபாலையும், இவர் மீண்டும் நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம், திருமணத்திற்கு முன்பு சமுத்திரகனியின் கிட்னா படத்தில் கமிட்டாகியிருந்தார். அவரது திடீர் திருமண அறிவிப்பை கேள்விப்பட்டதும் அவர் மீதான கிரேஸ் போய் விடும் என்று உடனடியாக மாற்று நடிகையை அந்த படத்திற்கு புக் பண்ணினார் சமுத்திரகனி.
ஆனபோதும், அமலாபால் தொடர்ந்து மலையாளத்தில் தான் கமிட்டாகியிருந்த மிலி படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார். அதையடுத்து தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஹைக்கூ படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தோடும் அவர் சினிமா கடலை விட்டு கரையேறப்போவதில்லையாம். மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க கதை கேட்டிருப்பதாக கூறி வருகிறார் அமலாபால்.