ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
டைரக்டர் வீரம் சிவாவுக்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட் உள்ளது. அதனால்தான் தான் தமிழில் இயக்கும் படங்களுக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் கதாநாயகியாக தேடிப்பிடித்து புக் பண்ணுவார். அந்த வகையில் தமிழில் தான் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலும் தமன்னாவை நடிக்க வைத்தார். அந்த படங்கள் தெலுங்கிலும் ஓரளவு ஓடியது.
அதனால் மீண்டும் அஜீத்தை இயக்கும் படத்திற்கும் அவர் தமன்னாவைத்தான் புக் பண்ண நினைத்தார். ஆனால், தற்போது தமிழைப் போலவே தெலுங்கிலும் தமன்னாவின் மார்க்கெட் சரிந்துதான் கிடக்கிறது. அதனால் அது ஒர்க்அவுட் ஆகவில்லை.
அதையடுத்து, யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோதுதான் தற்போது விஜய்யுடன் புலியில் நடித்துக்கொண்டிருக்கும ஸ்ருதிஹாசன் நினைவில் வந்தாராம். தெலுங்கிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அஜீத், ஏ.எம்.ரத்னம் இருவருமே உடனே ஓகே சொல்லிவிட்டார்களாம்.
அந்த வகையில், அஜீத்தின் புதிய படத்தில் நடிப்பதற்கு தற்போதைய நிலவரப்படி ஸ்ருதிஹாசன், சந்தானம் ஆகிய இரண்டுபேர் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.