மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவின் பிரபல பெண் கவிஞர் தாமரை. இயக்குநர் சீமானால், ''இனியவளே'' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தாமரை, பின்னாளில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார். குறிப்பாக கௌதம் மேனனின், ''மின்னலே'' தொடங்கி, ''என்னை அறிந்தால்'' வரை அனைத்து படங்களிலும் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் தாமரையின் கணவர், சில மாதங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில், தன்னையும் தன்மகனையும் தவிக்க விட்டு சென்று தலைமறைவாக இருக்கும், தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி இருக்கிறார் தாமரை. சென்னை, சூளைமேடு, பெரியார் பாதை அருகே தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தாமரையின் இந்த திடீர் தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.