டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசைஞானி இளையராஜா தன் தாய் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவர். சொந்த ஊரான பண்ணையபுரத்திலேயே இருவருக்கும் நினைவிடம் அமைத்திருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று பிரார்த்தனை செய்வார். இப்போது தன் தந்தையின் நினைவிடத்தை பிரமாண்ட மணிமண்டபமாக கட்ட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்ற இளையராஜா, அங்கு மணிமண்டபத்திற்கு இடம் தேர்வு செய்ததுடன் பொறியாளர்களின் டிசைன் பார்த்து இறுதி செய்து பூமி பூஜையும் நடத்தி முடித்து விட்டார். இதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 108 திவ்ய தேசங்களிலிருந்தும், புன்னிய நதிகளில் இருந்தும் புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறார். விரைவில் கட்டுமானப் பணிகள் நடக்க இருக்கிறது.