ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஷோபா சக்தி. அவர் தற்போது தீபன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஜாக் ஓடியார் ஈழத் தமிழர் பிரச்னையை மையமாக கொண்டு இயக்கும் படம் இது. இலங்கையில் யுத்தம் நடக்கும்போது அங்கிருந்து தப்பி அகதிகளாக பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மூன்று இளைஞர்கள், அங்கு சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. பிரான்ஸ், இலங்கை, ரமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்தப் படத்திற்கு வசனம் எழுதுவதற்காகத்தான் இயக்குனர் ஜாக், ஷோபா சக்தியை அழைத்திருக்கிறார். திடீரென அவரையே நடிகராக்கி விட்டார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை உலகம் முழுவதும் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது.