ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீவாவை சமீபகாலமாக தொடர் தோல்விகள் துரத்தி வருகின்றன. விக்ரமுடன் இணைந்து நடித்த டேவிட், வினய், சந்தானத்துடன் இணைந்து நடித்த என்றென்றும் புன்னகை, ரவி கே.சந்திரனின் இயக்கத்தில் நடித்த யான் என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு பின்னர் ஏமாற்றத்தையே கொடுத்தன.
அதனால், தான் அடுத்தபடியாக நடிக்கும் படத்தில் முன்பு தன்னுடன் ஈ படத்தில் நடித்த நயன்தாராவை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இது நம்ம ஆளு, மாயா படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா, அடுத்தபடியாக மாஸ், நானும் ரெளடிதான், தனி ஒருவன், காஷ்மோரா என பல படங்களில் நடித்து வருபவர், மலையாளத்தில் பாஸ்கர் த ராஸ்கல், தெலுங்கில் டிக்டேட்டர் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதனால் இந்த படங்களை முன்வைத்து இன்னும் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறாராம் நயன்தாரா. விளைவு, இப்போது ஸ்ரீதிவ்யா பக்கம் திரும்பி நிற்கின்றனர். அதோடு, இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறாராம். அவர் மட்டுமின்றி, காமெடியன்கள் மற்றும் கேரக்டர் நடிகர்களையும் தற்போது மார்க்கெட்டில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று தனதுதரப்பில் இருந்து வலியுறுத்தி வரும் ஜீவா, தனது புதிய படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். குறிப்பாக, மச்சி , பச்சி என வசனங்கள் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, புது ரூட்டில் பயணிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.