கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சித்தார்த் நடிகர் என்றபோதும் அவருக்குள்ளும் ஒரு டைரக்டர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். பாய்ஸ் படத்தில் அவர் எதிர்பாராதவிதமாக நடிகராக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பிருந்தே இயக்குனராக வேண்டும் என்பதுதான் சித்தார்த்தின் கனவாக இருந்தது. அதனால்தான் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றார். ஆனால், நடிகராகி விட்டதால் பின்னர் அவரால் தனது இயக்குனர் கனவை நனவாக்க முடியவில்லை. இருப்பினும் அந்த இயக்குனர் அவ்வப்போது தலைதூக்கும்போது தனக்கு தோன்றும் ஐடியாக்களையும் தன்னை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களிடம் வெளிப்படுத்துவார். இந்த குணம் சித்தார்த்திடம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், தற்போது கன்னட லூசியா படத்தின் தமிழ் ரீமேக்கான எனக்குள் ஒருவன் படத்தில் இரண்டு மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள சித்தார்த், ஏற்கனவே கன்னடத்தில் ஒரு நடிகர் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் அதன் சாயல் தனது நடிப்பில் வந்து விடக்கூடாது என்பதற்காக, இரண்டு கேரக்டர்களிலும் தனித்தனியே நடித்தவர், டைரக்டர் சொன்னதுபோக தனக்கு தோன்றிய புதிய விசயங்களையும் கலந்தே நடித்திருக்கிறார்.
அந்த வகையில், இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த எனக்குள் ஒருவன் படத்துக்காக கூடுதல் உழைப்பை போட்டிருக்கிறேன். அதனால் இதற்கு பெரிய பலன் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார் சித்தார்த்.