பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இப்போதெல்லாம் அஜித் ஒரு படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டால் அந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் இதற்கு முன்பெல்லாம் நெருக்கமான டைரக்டர்கள் என்றால் ஓரளவு கதையை சொன்னாலே சரி ஓகே என்று அடுத்தகட்ட வேலைகளை கவனிக்க சொல்லி விடுவார் அஜித்.
ஆனால் இப்போது அப்படியல்ல. ரசிகர்களை எக்காரணம் கொண்டும் ஏமாற்றிவிடக்கூடாது. குறிப்பாக தனக்கு திருப்தி இல்லாதபோதும் ரசிகர்களை திருப்திபடுத்தி விடவேண்டும் என்ற நோக்கத்துடன் கதைகளை கேட்கிறார். முதல்கட்டமாக ஷாலினி தரப்பினர் கதையை கேட்கின்றனர். அவர்களுக்கு ஓகே என்றால் அடுத்தகட்டமாக அஜித் கேட்கிறார். அந்தவகையில், இதுவரை வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கியபோது கமலிடம் மட்டுமே முழுக்கதையையும் சொன்ன கெளதம்மேனன், பின்னர் என்னை அறிந்தால் படத்திற்குத்தான் அஜீத்திடம் ஓப்பனிங்கில் இருந்து என்ட் கார்டு போடுவது வரை சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு ஏ டு இசட் கதையை சொன்னால்தான் அஜித்தும் இப்போது ஒத்துக்கொள்கிறார்.
அந்த வகையில், தற்போது வீரம் சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜித், ஓப்பனிங்கில் மொத்த கதையையும் கேட்ட பிறகும், அவ்வப்போது செய்யும் சின்னச்சின்ன திருத்தங்களைகூட தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆர்டர் போட்டுள்ளாராம். அதனால், எந்த முடிவாக இருந்தாலும் அஜித்தை கேட்டு அவர் அனுமதி கிடைத்த பிறகு அதை பைனல் செய்கிறார் டைரக்டர் சிவா.