'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் மறைந்த மூவி மொகல் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் தயாரிப்பாளார், இயக்குனர் மற்றும் நடிகரான தக்குபதி ராம நாயுடுக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் பிறந்து வளர்ந்த கரம்சேடு என்ற ஊரில், அந்த ஊர்க்காரர்களால் அவருக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல் மூலம் அவருக்கு தாங்கள் நன்றி கடனாக செய்ய இருப்பதாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர். இது தவிர ஐதராபாத்திலும், விசாகபட்டிணத்திலும் அமையப்பெற்றுள்ள அவருடைய ஸ்டுடியோக்களிலும் அவருக்கு சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.