‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டியும், ஷாரூக்கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படத்தில் பாலிவுட்டின் பிரபலமான 17 நட்சத்திரங்கள் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க போவதாக தகவல்கள் வௌியானது. இதை ஷாரூக்கான் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 17 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பது உண்மை தான். இந்த கதைக்கும் அப்படி ஒரு சூழல் உள்ளது. யார் யார் நடிக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது. சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் பேசி வருகிறோம். எல்லாம் முடிவான பிறகு முறையாக அறிவிக்கிறோம். மார்ச் 4 முதல் படத்தின் ஷூட்டிங்கை துவங்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஷாரூக்கான்.
தற்போது ஷாரூக்கான், யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ''பேன்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ரோகித் ஷெட்டியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.