மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி விநியோகித்த சில விநியோகஸ்தர்கள், தங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் "நான் லிங்கா என்ற படத்தை தயாரித்தேன். அதில் ரஜினிகாந்த் நடித்தார். படத்தை ஒப்பந்தம்போட்டு வாங்கியவர்கள். அந்த ஒப்பந்தத்தை மீறி நஷ்டஈடு கேட்டு வருகிறார்கள். அதோடு பட வியாபாரத்தில் தொடர்பில்லாத ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவித்தும், எனது நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்தும் வருகிறார்கள். எனவே இந்த விவகாரம் தொடர்பாக நடக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேச்சுகள், பேட்டிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ரஜினி, ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் லிங்கா படம் தொடர்பாக விமர்சனம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ, பேட்டி கொடுக்கவோ கூடாது என்றும், இதனை மீறுபவர்கள் நீதிமன்ற நடவடிக்கை உள்ளாவார்கள் என்றும் விநியோகஸ்தர்கள் வருகிற மார்ச் 23ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.