'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொழில்அதிபர் மற்றும் படத்தயாரிப்பாளரான வருண்மணியனை திருமணம் செய்ய இருக்கிறார் த்ரிஷா. கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டது. வருண்மணியன் பல ஆயிரம் கோடி சொத்துக்களை வைத்திருப்பவர். எனவே திருமணத்துக்குப் பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாது என்று வருண்மணியனின் குடும்பத்தார் கண்டிஷன் போட்டுள்ளார்கள். அதற்கு த்ரிஷாவும் அவரது அம்மாவும் அரம்பத்தில் தயங்கி உள்ளனர். பிறகு அந்த கண்டிஷனுக்கு உடன்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருமணத்துக்கு முன் முடிந்தளவுக்கு தன்னைத் தேடிவரும் படங்களை ஒப்புக்கொண்டு நடிப்பது என்று முடிவு செய்துள்ள த்ரிஷா தற்போது நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கும் அப்பாடக்கர் படமும் ஒன்று. தற்போது பொள்ளாச்சியில் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தன்னுடைய போர்ஷன் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பாமல், பொள்ளாச்சியிலேயே தங்கிவிட்டார் த்ரிஷா. தன்னுடைய ப்ரண்ட்ஸ் மற்றும் வருண்மணியனை பொள்ளாச்சிக்கு வரவழைத்த த்ரிஷா பொள்ளாச்சியை சுற்றியுள்ள வால்பாறை போன்ற இடங்களுக்கு ஜாலி டூர் சென்றுள்ளார்.