பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஆர்யா 'உள்ளம் கேட்குமே' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமாக அப்படியே சின்னச் சின்னப் படங்களில் நடித்து வந்தார். பாலாவின் பார்வை பட்டதும் 'நான் கடவுள்' படத்தில் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து அப்படியே பத்து படிக்கட்டுக்கள் தாண்டி மேலே ஏறிவிட்டார். ஆர்யாவுக்கு ஒரு பாலா கிடைத்தது போல அவருடைய தம்பியான சத்யாவுக்கு இன்னும் எந்த பாலாவும் கிடைக்கவில்லை. அதனால், இன்னும் படிக்கட்டுக்களில் ஏறாமலே இருக்கிறார்.
2013ம் ஆண்டு வெளிவந்த 'புத்தகம்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சத்யா. அந்தப் படம் பலரின் விமர்சனப் பக்கங்களில் கூட இடம் பெறாமல் போய்விட்டது. அடுத்து ஆர்யாவின் சொந்தத் தயாரிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'அமர காவியம்' படம் வெளிவந்தது. படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தாலும், அது சத்யாவுக்கு எந்த திருப்பு முனையையும் ஏற்படுத்தவில்லை. நீண்ட வருடங்களாக சத்யா நடித்து 'காதல் டூ கல்யாணம்' படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை. நாளை சத்யா நாயகனாக நடித்துள்ள 'எட்டுத் திக்கும் மதயானை' படம் வெளிவர உள்ளது. இந்தப் படமாவது சத்யாவுக்கு வெற்றிப் படமாக அமையுமா என்பதுதான் தற்போதைய கேள்வி. இந்தப் படத்தில் காக்கி சட்டையுடன் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் சத்யா நடித்திருக்கிறாராம்.
இந்தப் படமாவது சத்யாவின் பெயரை 'எட்டுத் திக்கும்' கொண்டு போய்ச் சேர்க்குமா என்று பார்ப்போம்.