தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னட லூசியா படத்தின் தமிழ் ரீமேக்கான எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கன்னட நடிகை தீபா சன்னதி. கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் என்பதால், அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் அதிக உற்சாகத்துடன் கமிட்டானார் தீபா சன்னதி. அதோடு, அந்த படத்தின் நாயகன் அவரது பேவரிட் ஹீரோ சித்தார்த் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நடித்து முடித்திருக்கும் தீபா, தற்போது படத்தின் ரிசல்ட்டை எதிர்நோக்கியிருக்கிறார். மேலும், அப்படப்பிடிப்பில் நடந்த சில விசயங்களையும் தற்போது நட்பு வட்டாரங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.
அதாவது, எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தபோது, ஒருநாள் பெங்களூரில் இருந்து இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது குறிப்பிட்ட நேரத்திற்குள் படப்பிடிப்பு தளத்தை அடைய முடியவில்லையாம். அன்றைய தினம் சித்தார்த்துடன் நடிக்க வேண்டிய முககிய காட்சிகள் இருந்ததால், அதிக டென்சனாகி விட்டாராம் தீபா சன்னதி. ஒருவழியாக அவர் ஸ்பாட்டை அடைந்தபோது கிட்டத்தட்ட மதியவேளை நெருங்கியிருந்ததாம். ஆனால், தீபா எதிர்பார்த்தபடி சித்தார்த் டென்சனை காட்டவில்லையாம். மாறாக, அவர் நடிக்க வேண்டிய காட்சி சந்தோசமானது என்பதால், தீபாசன்னதியை சந்தோசமாக வரவேற்று அந்த காட்சியில் நடிக்க வைத்தாராம்.
ஆனால், காட்சி ஓகே ஆனபிறகு, இப்படி செய்யலாமா? என்று மென்மையாக கேட்ட சித்தார்த், நடிகர் நடிகைகளுக்கு நேரந்தவறாமை ரொம்ப முக்கியம் என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துக்கொண்டு கேரவனுக்குள் சென்று விட்டாராம். எப்படியோ ஷாட் முடிந்ததும் தன்னை சகட்டுமேனிக்கு சித்தார்த் திட்டித்தீர்க்கப்போகிறார் என்று மனதளவில் நினைத்துககொண்டிருந்த தீபாசன்னதிக்கு அவர் பொறுமையாக அட்வைஸ் பண்ணியது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்ததாம். அதோடு, அவரது வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து இனிமேல் எந்த படமாக இருந்தாலும் சரியான நேரத்திற்குள் ஆஜராகி விட வேண்டும் என்றும் உறுதி எடுத்திருக்கிறாராம் தீபா சன்னதி.