பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்தவர் அகிலா கிஷோர். பெங்களூர் நடிகையான இவர் அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதைப்பார்த்து விட்டு பாரதிராஜாவே இந்த நடிகையை எங்கே பிடிச்சே? அற்புதமாக நடித்திருக்கிறாள் என்று பார்த்திபனிடம் புகழ்மடல் வாசித்தார்.
அந்த விசயத்தை பார்த்திபன், அகிலாவிடம் சொன்னபோது, சந்தோச வானில் சிறகடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டரே தனது நடிப்பை பாராட்டி விட்டதால் அடுத்தபடியாக படங்கள் அணிவகுக்கப்போகிறது என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், அதன்பிறகு மூன்றாம் உலகப்போர் என்ற ஒரேயொரு படம் மட்டுமே அகிலா கிஷோருக்கு புக்கானது. அந்த படத்திலும் சில மாதங்களுக்கு முன்பே நடித்துக்கொடுத்து விட்டார் அகிலா.
இந்த நிலையில், நயன்தாராவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறார் என்று சிலர் கூறியதை அடுத்து, நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு கிடைக்காமல் வேறு நடிகைகள் பக்கம் திரும்பிய டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டார் அகிலா. ஆனால், மார்க்கெட்டில் பேசப்படும் இடத்தில் அவர் இல்லாததால் முன்பு சான்ஸ் தருவதாக வாய் வார்த்தையில் அக்ரிமெண்ட் போட்டிருந்தவர்கள்கூட இப்போது ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அதனால் தமிழ் சினிமா மீது பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கிய அகிலா கிஷோர், மீண்டும் தாய்மொழியான கன்னட படங்களில் நடிக்க தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார்.