டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எனக்கு இந்த பீல்டில் சப்போர்ட்டா யாருமே இல்லை. அதனால் சப்போர்ட் இல்லாமல் இந்த பீல்டில் ஜெயித்தவர்களைத்தான் நான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வேன். அந்தவகையில், விக்ரம், அஜீத் ஆகியோர்தான் எனக்கு ரோல் மாடல் என்கிறார் நடிகர் ஹேமந்த்குமார்.
தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
உங்களது என்ட்ரி பற்றி?
எனது முதல் படம் வசூல் 2008-ல் வந்தது. கிரண் எனக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு வேடப்பன், காதல் பயணம், ஆலமரம், விருதாலம்பட்டு என பல படங்களில் நடித்துள்ளேன். இப்போது புரூஸ்லி இந்தியாவில் பிறந்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனையாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் நான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள அந்த படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடியாகி விட்டது.
மேலும், நான் சினிமாவில் நடிகனானது என் விருப்பம் கிடையாது. எனது அப்போவோட ஆசைதான். அப்பா சினிமாவில் டைரக்டராக ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் முயற்சி எடுத்து வந்தபோதே திருமணமாகி விட்டதாம். அதனால் அதன்பிறகு அவரால் சினிமாவிற்குள் வரமுடியவிலலையாம். அவர் கனவைதான் என் மீது திருப்பிவிட்டார். எனக்கு பெரிய அளவில நம்பிக்கை இல்லை. இருப்பினும் ஒரு பெரிய ஹீரோவாக இல்லை என்றாலும், ஒரு ஆர்ட்டிஸ்டாக வரவேண்டும் என்ற எண்ணத்துடன் பீல்டிற்குள் வந்தேன்.
டைரக்டர் கனவு இருக்கும்போது எதற்காக உங்களை நடிகராக்கினார்?
நான் சிறுவனாக இருந்தபோதே ரஜினியின் தில்லானா தில்லானா பாடலை டிவியில் பார்த்து அவரை மாதிரியே ஆடியிருக்கிறேன். இதேமாதிரி புரூஸ்லியின் படஙகளை பார்த்து விட்டு அவரை மாதிரியே செய்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து நான் செய்ததைப்பார்த்து விட்டுத்தான். எனக்குள் நடிப்பு இருப்பதாக அறிந்து என்னை நடிகராக்கியிருககிறார். அதோடு, கரகாட்டம், கிராமிய நடனம் போன்றவற்றையும் முறைப்படி பயிற்சி கொடுத்தனர்.
மேலும், நான் சின்ன வயதில் அவ்ளோ அழகாக இல்லை. இந்த இன்டஸ்ட்ரிக்குள் வந்த பிறகுதான் அழகாகி விட்டேன். குறிப்பாக வசூல் படத்தில் ஒரு மாதிரியாக இருப்பேன். அதன்பிறகு ஒவ்வொரு படத்திலும் மோல்டாகிக்கொண்டே வந்திருப்பேன். ஆக, இந்த பீல்டுக்கு வந்த பிறகுதான் அழகாகி விட்டேன்.
நடித்த படங்களின் தோல்வி பற்றி?
நடித்த படங்கள் ஓடாதபோது வருத்தமாக இருக்கும். ஆனால் சில நண்பர்கள் ஆரம்பத்தில் தோல்வியடைந்து பின்னர் வெற்றி பெற்ற நடிகர்களை சுட்டிக்காட்டி, முயற்சி செய்து கொண்டேயிரு ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்ற சொல்வார்கள். அது எனக்கு ஒரு மருந்தாக தோன்றும். அதையடுத்து மீண்டு நல்ல கதைகளாக தேடத் தொடங்கி விடுவேன். ஆக, தேடல்கள் இப்போது என்னிடம் அதிகரித்து விட்டது.
படங்கள் தோல்வியடைவதால் ரூட்டை மாற்றினால் என்ன?
ஏற்கனவே நான் ஒரு நடிகனாக வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் வந்தேன். ஹீரோவாக வேண்டும் என்பது எனது நோக்கமே இல்லை. அதனால் எதிர்காலத்தில் அண்ணன், தம்பி, வில்லன், அப்பா என மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாக வேண்டும் என்ற ஆசையும் என்னிடம் ஏற்பட்டுள்ளது.
இப்போது வில்லன் ரோல்கள் வந்தால் நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோ என்கிறபோது ஒரு லிமிட்டுக்குள் நின்றுதான் நடிக்க வேண்டும்.ஆனால் அதுவே வில்லன் என்றால் லிமிட்டை தாண்டியும் நடிக்கலாம். நடிப்பில் நிறைய ஸ்கோர் பண்ண முடியும். அதனால் வில்லன் வேடம் கிடைத்தாலும் நடிப்பேன்.
மேலும், எனக்கு இந்த பீல்டில் சப்போர்ட்டா யாருமே இல்லை. அதனால் சப்போர்ட் இல்லாமல் இந்த பீல்டில் ஜெயித்தவர்களைத்தான் நான் ரோல் மாடலாக எடுத்துக்குவேன். அந்தவகையில், விக்ரம், அஜீத் ஆகியோர்தான் எனக்கு ரோல் மாடல். அவர்களை மாதிரி ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் என்னிடம் அதிகமாக உள்ளது.
இவர்கள் இருவரில் உங்களை அதிக வியக்க வைத்தவர் யார்?
அஜீத் மாஸ் ஹீரோ. விக்ரம் ஒவ்வொரு படத்திலுமே தத்ரூபமாக நடிப்பார். அந்த கதைக்காக அவர் வருத்திக் கொள்வதைப் பார்க்கையில் மலைப்பாக உள்ளது. அதோடு என்போன்று வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் அந்த மாதிரியெல்லாம் வாயப்புகள் கிடைத்தால் நடிக்க வேண்டும் என்கிற ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது.அந்தவகையில், சேது, காசி, அந்நியன், ஐ என விக்ரம் நடித்த பல படங்கள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன.
உங்களுடன் நடித்தவர்களில் எந்த நடிகை தோழியாக உள்ளார்?
அப்படியெல்லாம் குறிப்பிட்டு யாரையும் சொல்ல முயாது. எனனுடன் நடித்த நடிகைகளை வைத்து பார்க்கையில் எங்கு வெயிட் உள்ளதோ அந்த பக்கம் சாய்ந்து விடுவார்கள். முக்கியமாக பெரிய மனிதர்கள், பணக்காரர்கள் இவர்களைப்பார்த்துதான் பழகுகிறார்கள். அதனால் நானும் அதைப்பார்த்து விலகிக்கொள்வேன். அதனால் எந்த நடிகைகளுடனும் நான் நட்பு வைத்துக்கொண்டதில்லை. அதோடு நானும் ஒரு பெரிய இடத்து பையனாக இருந்திருந்தால் என்னுடன் நடித்த அத்தனை நடிகைகளும் இப்போது எனது தோழிகளாக இருந்திருப்பார்கள்.
மேலும, அந்த நடிகையுடன் நடிக்கணும், இந்த நடிகருடன் நடிக்கணும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை ஸ்பாட்டுக்கு சென்றால் நானும அவர்களை மாதிரி ஒரு நடிகன். டைரக்டர் சொன்ன வேலையை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் ஓடுகிறது.
சினிமா-சீரியல் இரண்டிலுமே நடிக்கிறீர்களே. எந்த மீடியாவில் நல்ல ரீச் கிடைத்தது?
சினிமாவில் நடிக்கிறபோது படங்கள் வெற்றி பெற்றால்தான் ரீச் கிடைக்கும். ஆனால் சீரியல்கள் வீடு தேடி செல்வதால் எளிதில் ரீச் கிடைத்து விடுகிறது. அதோடு சினிமா என்பது யூத்துக்கு மட்டும்தான் என்றாகி விட்டது. ஆனால் டிவியை வீட்டில் இருக்கும் அனைவருமே பார்க்கிறார்கள். மேலும, சினிமாவில் ஒரு சின்ன பாடிலாங்குவேஜ் என்றால்கூட ஆடியன்ஸ் கண்டு பிடித்து விடுவார்கள். ஒவ்வொரு விசயத்தையும் ஆடியன்ஸ் நோட் பண்ணுவார்கள். ஆனால் சீரியலில் அப்படியல்ல.
மேலும் சினிமாவில் நமக்கென்று ஒரு ஸ்டைல், ஒரு பாணி பிடிக்க வேண்டும். அதை பிடிப்பது ரொம்ப கஷ்டம். அதை ஆடியன்சுக்கு கொண்டு போறது. இதுதான் எனது ஸ்டைல் என்று புரிய வைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் டிவியில் அப்படி எதுவும் தேவையில்லை. அந்தந்த கேரக்டராக பண்ணிக்கொண்டே போகலாம்.
மகாபாரதம் தொடரில் நடிப்பதால் உங்களது ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகாதா?
அப்படியெல்லாம் இல்லை. எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதை விட ஒரு நடிகனாக வர வேண்டும் என்பதுதான் ஆசையே. அதனால், நான் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டபோதும் அடுத்தபடியாக வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். அதனால்தான் ஒரு அனுபவத்திற்காக மகாபாரதம் தொடரில் இந்திரன் வேடத்தில நடிக்கிறேன். வித்தியாசமான காஸ்டியூம்களை அணிந்து செந்தமிழில் பேசி நடிப்பது ரொம்ப நல்ல அனுபவமாக உள்ளது. இந்த மாதிரி கேரக்டர்கள் இனிமேல் சினிமாவில் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை.
ஹீரோவாக மட்டுமில்லாமல் ஒரு ஆர்ட்டிஸ்டாக ஆவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது என்ற கோணத்தில் இப்போது எனது கவனம் திரும்பியுள்ளது. அதனால் சினிமா, சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் பிடித்தமான எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பேன். ஹீரோ என்கிற வட்டத்திற்குள் அடைபட்டுக்கொள்ள நான் விரும்பவில்லை என்கிறார் ஹேமந்த்குமார்.