ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என்ன ஆச்சு நடிகை ரம்யா நம்பீசனுக்கு..? கடந்த 2௦013ல் மொத்தம் பத்து படங்களில் நடித்து அதிகப்படங்களில் நடித்த நடிகை என பெயரை தட்டிச்சென்றவருக்கு, கடந்த வருடம் வெளியானது 'டமால் டுமீல்' என்கிற ஒரே படம் மட்டும் தான். கேட்டால் நான் நடித்து முடித்த ஒன்றிரண்டு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்ப்போனதால் இந்த வருடத்தில் வரிசையாக வெளியாகும் என்கிறார். அதுமட்டுமல்ல, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடுவதில் பிசியாகிவிட்டேனே என படங்கள் வெளியாகாததற்கு சாக்குப்போக்கு சொல்கிறார் ரம்யா நம்பீசன்.
ரம்யா நம்பீசன் பாடகியாக மாறி ரொம்ப நாட்களாச்சு. அவரது தாய்மொழியான மலையாளத்தில்.. 'இவன் மெகாரூபன்' என்ற படத்தில் இவர் பாடிய 'ஆண்டலோண்டே' என்ற பாடல் இவரது குரலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது. அதன்பின்னர் தேசியவிருதுகள் பெற்ற 'தட்டத்தின் மறயத்து' படத்தில் இவர் பாடிய 'முத்துச்சிப்பி' என்ற பாடல் ஒரு கட்டத்தில் கேரளாவின் தேசியகீதம்போல திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. போதாததற்கு, தமிழிலும் 'பாண்டிய நாடு' படத்தில் இவர் பாடிய 'ஃபை ஃபை ஃபை' பாடல் இங்கே ஹிட்டாகிவிட்டாலும் கூட, 'டமால் டுமீல்', 'சகாப்தம்' படங்களைத்தவிர வேறு எதிலும் அவர் பாடவில்லையே..