'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா தேவன் மலையாளப் படங்களில் தீவிரமாக நடித்தார். சிம்மாசனம், தி ஹிட் லிஸ்ட், கர்மயோகா, தேங்க்யூ படங்களில் நடித்தார். கன்னடத்தில் ஜெயலலிதா படத்தில் நடித்தார். தமிழ் படத்தில் அறிமுகமாகி நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது.
அப்போதுதான் அனேகன் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ், கே.வி.ஆனந்த் கூட்டணி என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்தார். அனேகன் தனக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை தரும் என்று நம்பினார். ஆனால் அனேகன் படத்தில் அவருக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பர்மா போர்ஷனில் தனுஷை காதலித்து விட்டு அவர் அமைராவை காதலிப்பதால் கோபித்துக் கொண்டு ஜெகனை மணந்து, தனுஷ், அமைராவை போலீசிடம் காட்டி கொடுக்கிற வில்லித்தனமான கேரக்டரில் நடித்தார். இதில் தனுஷை காதலிக்கும் சில காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக குறைக்கப்பட்டுவிட்டது.
இந்த ஜென்மத்தில் தனுஷ், அமைராவுடன் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவராக வந்து சில காட்சிகளில் மட்டுமே நடித்துவிட்டு பின்பு மாடியிலிருந்து குதித்து செத்து விடுவார். இப்படி உடனுக்குடன் அவர் காட்சிகள் முடிந்து விடுவதால் அவரது கேரக்டர் பெரியதாக பேசப்படவில்லை. இதனால் அடுத்து நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா தேவன்.