ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை குஷ்பு ருத்திராட்சத்தில் தாலி அணிந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்தது. இதை பார்த்து கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் பாலா, கும்பகோணம் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
"ருத்ராட்ச மாலை சிவனடியார்களும், சிவபக்தர்களும் அணியும் புனிதமானது. அதனை குஷ்பு தாலியாக அணிந்திருப்பது இந்து மதத்துக்கு விரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தது. "இந்த வழக்கின் சாட்சியாக பத்திரிகை படத்தை மட்டுமே மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். நேரில் பார்த்த சாட்சிகள் விபரம் தரப்படவில்லை. வழக்கிற்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக குஷ்பு கூறும்போது "நான் அணிந்திருந்தது ருத்ராட்சமும் அல்ல. அதில் கோர்க்கப்பட்டிருந்தது தாலியும் அல்ல. இரண்டுமே பிளாஷ்டிக்கால் செய்யப்பட்டது. ஒரு மாறுதலுக்காக அதை அணிந்திருந்தேன். நான் என்ன தாலி அணிந்திருக்கிறேன் என்பதை யாருக்கும் காட்டத் தேவையில்லை" என்று கருத்து தெரிவித்திருந்தார்.