'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படம், அந்தக் காலத்தில் வெற்றி பெற்ற திகில் படம். இதில் மோகன், நளினி, சத்யராஜ் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை தழுவி நூறாவது நாள் படத்தை ரீபூட் முறையில் எடுக்க இருப்பதாக இயக்குனர் மணிவண்னின் மகன் ரகுவண்ணன் சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தின் உரிமை எங்களிடமே உள்ளது. எங்கள் அனுமதியின்றி படத்தின் தலைப்பையோ கதையையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நூறாவது நாள் படத்தை தயாரித்த என்.எஸ்.திருமாலின் மகள் பத்மாவதி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
"மணிவண்ணன் இயக்கத்தில், என் தந்தை நூறாவது நாள், 24 மணி நேரம் ஆகிய படங்களை தயாரித்தார். அந்த படங்களின் அனைத்து உரிமையும் என்னிடமே உள்ளது. இதனை மணிவண்ணனே எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ரகு மணிவண்ணன் அந்த படத்தை மீண்டும் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இதற்காக அவர் எந்த அனுமதியும் என்னிடம் பெறவில்லை. இது சட்டப்படி குற்றமாகும். இதன் மீது தயாரிப்பாளர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.