தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாகவி பாரதியார் எழுதிய பாடலைப் பற்றி நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் இளையராஜா பேசியது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அம்மா அன்னதானத் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து இளையராஜா பேசும் போது, “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் தப்பாகப் பாடி விட்டானே பாரதி என்று தோன்றும். அதில் மட்டுமல்ல, 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்,'னு சொன்னான். வெளிநாட்டுல இருக்கிறதையெல்லாம் இங்க கொண்டு வந்து சேருங்கடான்னு சொல்லிட்டான். அதுலயும் எனக்கு உடன்பாடில்லை.
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொண்டு அங்கு சேர்ப்பீர்,'னு பாடியிருக்கணும். 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சாப்பாடு போடுவோம்னு' அல்லவா பாடியிருக்கணும். சாப்பாடு போடுவோம், ஜெகத்தை எதற்கு அழிக்கணும். இயற்கையெல்லாம் விளைந்து கொட்டுகிறது, மழை பொழிந்தால் பயிர்கள் விளைகின்றன, மழை பொழிந்தால் பாறை கூட ஈரம் ஆகிறது, அந்த ஈரம் நம் மனதில் இல்லையா...தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால் அவனுக்கு உணவளிப்போம் என்ற திட்டம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்,” என்று பேசியுள்ளார்.
தனி ஒருவனுக்கு உணவளிக்காதவர்களைக் கண்டித்துத்தான் பாரதி அன்று பாடினான். அப்படி கொடுக்காத மனிதர்கள் உள்ள ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான். ஆனால், பாரதி பாடிய பாடலையே மாற்றிப் பாடியிருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் இளையராஜா. அதோடு, 'கலைச் செல்வங்கள்' பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கலைச் செல்வங்கள் என்பது அறிவுச் செல்வங்கள் என்றுதான் பாரதி சொன்னான். அதை இளையராஜா பொருள் செல்வம் என்று எடுத்துக் கொண்டாரா என்றும் தெரியவில்லை.
பாரதியார் எழுதிய பாடலைப் பற்றி இளையராஜா விமர்சித்திருப்பது புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது, பாரதியார் பாடியது சரிதானா, அல்லது அவரும் விமர்சனத்துக்குட்பட்டவர்தானா, அப்படியென்றால் பாரதியார் பாடிய பாடலையே விமர்சித்த இளையராஜாவும் விமர்சனத்துக்குட்பட்டவர்தானே...? இளையராஜா சொல்வதைப் போல் இங்கு மழை பொழிந்து விவசாயம் அவ்வளவாகக் கொழிக்கவில்லையே...தண்ணீருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகளை அவர் பார்க்கவேயில்லையா...என்று பல கேள்விகள் எழுகின்றன.